ஆளும் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் த.வெ.க. வரும் தேர்தலில் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பித்துள்ளனர். அதில் இருந்து சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று (நவம்பர் 11, 2025) காலை மனு அளித்துள்ளது. கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலையில் த.வெ.க. நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனுவை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் நேரடியாக வழங்கினர்.

மனுவில் 10 விருப்ப சின்னங்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ள தவெக, “கட்சி 07.02.2025 அன்று பதிவு செய்யப்பட்டு, மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதால், பொது சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, புதிய கட்சிகளுக்கு முதல் தேர்தலில் பொது சின்னம் ஒதுக்கீடு செய்ய முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தவெக முதல் கட்சியாக நவம்பர் மாதத்திலேயே மனு அளித்துள்ளது. சின்ன ஒதுக்கீடு குறித்த இறுதி முடிவு டிசம்பர் 2025 இறுதிக்குள் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் த.வெ.க. கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal