பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும் காத்திருந்து சந்தித்தனர். ஆனால், டி.டி.வி.தினகரன் சந்திக்காததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருகிறது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் இன்னும் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது

பசும்​பொன்​னில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய தினகரன், ‘‘சின்​னம்மா எங்​களோடு வந்து இக்​கூட்​டத்​தில் கலந்து கொள்ள முடிய​வில்​லை. அவர்கள் தாமத​மாக புறப்​பட்​ட​தால் அவரால் சரி​யான நேரத்​திற்கு இங்கு வரமுடிய​வில்​லை. அவர்​கள் மனதால் எங்​களு​டன் எப்​போதும் இருப்​பார்​கள். ஏனென்​றால், துரோகம் வீழ்த்​தப்பட வேண்​டும்” என்று சமாளித்​தார்.

சசிகலாவை சந்​திக்​காமல் தவிர்ப்​பது ஏன் என நேற்று மதுரை சோழ​வந்​தானில் தினகரனிடம், செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பிய போது, ‘‘சின்​னம்மா என்​பதை தாண்டி அவர்​கள் எனக்கு சித்​தி. வித்​தி​யாசத்தை புரிந்து கொள்​ளுங்​கள். இப்​படி​யெல்​லாம் கேள்வி கேட்​காதீர்​கள்’’ என்​றார்.

தினகரனும் சசிகலா​வும் பொது​வெளி​யில் சந்​தித்​துப் பேசுவதை தவிர்ப்​பது ஏன் என்​பது அமமுக​வினருக்​கும் புரி​யாத புதி​ராகவே இருக்​கிறது. உள் விவகாரங்​களை அறிந்த அமமுக நிர்​வாகி​களோ, ‘‘சின்​னம்மா சிறை​யில் இருந்த சமயத்​தில் தினகரன் அமமுகவை தொடங்​கிய​தில் இரு​வ​ருக்​குள்​ளும் ஆரம்​பத்​தில் சில வருத்​தங்​கள் இருந்​தன. ஆனால், தற்​போது அதெல்​லாம் சரி​யாகி​விட்​டது. சீக்​கிரமே பொது​வெளி​யில் இரு​வ​ரும் சந்​தித்​துப் பேசுவார்கள்” என்​கிறார்​கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி, ஓ-பிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் கைகோர்த்த பிறகும், சசிகலா இவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள் அ.ம.மு.க.வில் இருந்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த மூத்த நிர்வாகிகள்.

இது பற்றி மேலும் அவர்களிடம் பேசியபோது, ‘‘சார், சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பனை அ.ம.மு.க. மூலமாக டி.டி.வி. தினகரன்தான் கொடுத்தார். இதனை மகிழ்ச்சியுடன் சசிகலா ஏற்றுக்கொண்டார்.

ஆனால், சசிகலா சிறையில் இருக்கும்போது, அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதோடு, அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். இதற்கு சசிகலா முழுமையாக ஆதரவு கொடுப்பார் என எதிர்பார்த்தார் டி.டி.வி.தினகரன். ஆனால், சசிகலா அ.ம.மு.க.விற்கு ஆதரவு கொடுக்கவில்லை.

தவிர, டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவுக்கும் இடையயான உறவே சரியில்லாத காரணத்தால்தான், அ.ம.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்யைடன் கைகோர்த்தாலும், இவர்களுடன் சசிகலா கைகோர்க்க வாய்ப்பே இல்லை. அந்தளவிற்கு டி.டி.வி.க்கும், சசிகலாவிற்கும் இடையோ உள்ளுட பனிப்போர் நீடித்து வருகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal