‘‘மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழகத்தை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்’’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்.
மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம். தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும். இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
