‘பா.ஜ.க.வின் ‘ஸ்லீப்பர் செல்’தான் துரை வைகோ’ என பகீரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் மல்லை சத்தியா!

மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ‘‘மதி​முக​வில் ஏற்பட்​டுள்ள நிலை​மைக்கு நாங்​கள் காரணமல்ல. ரஷி​யா​வில் சிக்​கி​யுள்ள மருத்​துவ மாணவரை மீட்​ப​தற்​கான கோரிக்கை கடிதத்தில், எதிர்​நிலை​யில் இருக்​கும் பாஜக எம்​.பி.க்​களிடம் ஏன் கையெழுத்து பெற்​றார் என்​ப​தற்கு மதி​முக முதன்​மைச் செயலாளர் துரை வைகோ விடையளிக்க வேண்​டும்.

அவர் பாஜக​வின் ஸ்லீப்​பர் செல்​லாக தமிழகத்​தில் இருக்​கிறார் என்​பதை மீண்​டும் மீண்​டும் நிரூபித்​துக் கொண்​டிருக்​கிறார். மதிமுக வைகோ​வின் கட்​டுப்​பாட்​டில் இல்​லை. கருணாநி​தி​யின் இறுதி தரு​வா​யில் காலமெல்​லாம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்​கும் உறு​துணை​யாக இருப்​பேன் என்று அளித்த உத்​தர​வாதம் உண்​மை​யா​னால், பாஜக​விடம் கையெழுத்து பெற்​றது தவறு என ஏன் கண்​டிக்​க​வில்​லை.

வைகோவுக்கு திமுக கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும் என்ற விருப்​பம் இருக்​கலாம், ஆனால், துரைக்கு மத்​திய அமைச்​ச​ராக வேண்டும் என்ற விருப்​பம் இருக்​கும் காரணத்​தாலேயே அவர் பாஜக​விடம் நெருக்​கம் காட்​டு​கிறார். இது வெட்​கக் கேடு, தமிழக மக்கள் ஏற்​க​மாட்​டார்​கள். அண்ணா பிறந்​த​நாள் மாநாட்டை நாங்​கள் காஞ்​சிபுரத்​தில் நடத்​துகிறோம்’’ இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal