புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி கூடுகிறது.
புதிய அரசின் முதல் கூட்டமாக அமையும் இதில், அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அன்று பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தலும் நடக்கிறது.

அதேபோல வருகிற 27-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. வருகிற 23-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவார் என்று கூறப்படுகிறது.

By admin