ஆரல்வாய்மொழி வடக்கூர் மேலத்தெரு அருள்மிகு பொய்கை விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பூதசுத்தி ஆறாம் கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்றது தொடர்ந்து 5 மணிக்கு ஸ்பர்சாகுதி, திரவ்யாகுதி, காலை 6.15மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது காலை ஆறு முப்பது மணிக்கு யாத்ராதானம் மற்றும் கடங்கள் யாகசாலையை விட்டு புறப்பட்டு ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து அருள்மிகு பொய்கை விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது 9:30 மணிக்கு மஹா அபிஷேகங்களும் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.காலை 11 மணிக்கு மஹேஸ்வரர் பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு ஸ்ரீ பொய்கை விநாயகர் முஷிக வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியினை அருள்மிகு பொய்கை விநாயகர் டிரஸ்ட் செய்து வந்தனர்

By admin