இராமநாதபுரம்: ஆக 17.


சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி இராமநாதபுரம் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.


சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி இரவு பட்டா கத்தியுடன் நுழைந்த ராஜேஸ்குமார் என்பவன் அங்குள்ள பொருள்களை சூறையாடியும், பணியில் இருந்தவர்களுக்கு கொலை மிரட்டலும் வீடுத்தான். இந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினர் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்நிலையில் இன்று இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சத்தியம் தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் ஈடுபட்ட ராஜேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 25க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தாக்குதலுக்கு எதிராகவும், ராஜேஸை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரியும் கண்ட முழக்கங்களை எழுப்பினர்.

By admin