அரியலூர் சிறுவனை காப்பாற்றிய தஞ்சை மருத்துவர்கள்.

அரியலூர் மாவட்டம் வானதிரையன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் ராஜா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்தநிலையில் சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்த போது கீழே இருந்த 3 அடி நீளம் கொண்ட குச்சி தொடையில் குத்தியுள்ளது. இதையடுத்து சிறுவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகள் சென்ற பிறகு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுவன் தொடையில் இருந்த குச்சியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

By admin